Saturday 18 April 2015

றவூப் ஸெய்ன்; வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் கடந்த இரு தசாப்தங்களாக

 
றவூப் ஸெய்ன் இறக்காமத்தில் பிறந்தவர். கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்திலுள்ள அழகிய கிராமம் அது. ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் இறக்காமம் அல்-அஷ்ரப் மஹா வித்தியாலயத்தில் பெற்ற பின் பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்து 07 ஆண்டுகால ஷரீஆ கற்கை நெறியை முதற்தர சித்தியுடன் பூர்த்தி செய்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை முடித்து, இந்தியாவின் காமராஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் முதுமானி, முதுகலைமானி பட்டங்களைப் பெற்றுள்ள இவர், தற்போது தனது கலாநிதிக் கற்கை நெறிக்காக தயாராகி வருகின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரயோக சமூகவியலிலும் திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வியியலிலும் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். மனைவி பாதிமா ஹனான். பிள்ளைகள் ஆகிப் ஸெய்ன், ஆலிப் அனாம்.
அரசியல். வரலாறு, கல்வி, தத்துவம், சமூவியல், உளவியல், பின்கொலனியம், சர்வதேச உறவுகள் ஆகிய அறிவுப் புலங்களில் தீவிரமாக இயங்கி வருபவர். 15 இற்கு மேற்பட்ட சமூக, கல்வி, உளவியல் துறை ஆய்வுகள் இவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தவிர நூற்றுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. அதற்கப்பால் பல்வேறு துறை சார்ந்த முப்பது நூல்களை அறிவுலகத்திற்கு வழங்கியுள்ளார். றவூப் ஸெய்னின் பல்வேறு துறைசார்ந்த பல நூறு கட்டுரைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஆய்விதழ்கள், சிறப்பிதழ்களில் வெளிவந்துள்ளன.
வானொலி, தொலைக்காட்சி மற்றும் அனைத்து வகை அச்சு ஊடகங்களிலும் கடந்த இரு தசாப்தங்களாக பங்களித்து வரும் இவர் இலங்கையிலுள்ள அனேகமான முஸ்லிம் கிராமங்களையும் பாடசாலைகளையும் தரிசித்துள்ளார். அங்கெல்லாம் சமூக, கல்வி, சமய, கலாசார நிகழ்ச்சிகளில் தனித்தும் நிறுவன ரீதியிலும் ஒரு வினைத்திறனுள்ள வளவாளராகப் பங்காற்றி வருகின்றார். (Lankascholars)

Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

No comments:

Post a Comment